பருவநிலை மாறுபாடு உணவு உற்பத்தி குறையும் அபாயம்
பதிவு செய்த நாள்
20டிச
2014
06:15
ரோம்: உலகம் முழுவதும் மாறி வரும் பருவநிலை மாறுபாடு காரணமாக உணவு உற்பத்தி 18 சதவீம் அளவில் குறையும் என உலக சுற்றுச்சூழல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. லெக்கிளாரி மற்றும் மைக்கேல் ஒபர்ஸ்டினர் ஆகியோர் வெளி்யிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது: உலகம் முழுவதும் பருவ நிலைமாறுபாடு காணப்படுகிறது. காலம் தவறி மழை பெய்து வருகிறது. தொழிற்சாலை அதிகரிப்பு காரணமாக காடுகள் மரங்கள் அழிக்கப்பட்டு வருகிறது. இதனால் வான்வெளி மையத்தில் கரியமில வாயு அளவு அதிகரித்துவருகிறது. இதனை தவிர்க்கும் வகையில் ஒவ்வொரு நாடும் 25 சதவீதத்திற்கும் அதிகமான அளவில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். இல்லையெனில் வரும் 2050-ம் ஆண்டிற்குள் 18 சதவீதம் அளவிற்கு உணவு உற்பத்தியில் குறைவு ஏற்படும் என தெரிவித்துள்ளனர்.
Source:
No comments:
Post a Comment