Tuesday 9 December 2014

சில இடங்களில் மழை வாய்ப்பு

First Published : 10 December 2014 05:00 AM IST
தமிழகம், புதுவையின் சில இடங்களில் புதன்கிழமை பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியது: தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கைக்கு அருகில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவானது. இந்தக் காற்றழுத்தத் தாழ்வு நிலை செவ்வாய்க்கிழமையும் அதே இடத்தில் நீடித்தது.
இந்தக் காற்றழுத்தத் தாழ்வு நிலையின் காரணமாக தமிழகம், புதுவையின் சில இடங்களில் அடுத்த 2 நாள்களுக்கு பலத்த மழை பெய்யும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் புதன்கிழமை ஆங்காங்கே மிதமான மழை முதல் பலத்த மழை வரை பெய்யும். சென்னையைப் பொருத்தவரையில் வானம் மேகமூட்டமாக இருக்கும். மாலை அல்லது இரவில் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யும்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் 30 மி.மீ. மழையும், பாளையங்கோட்டை, சாத்தூர், சென்னை, கயத்தாறு, திருச்செந்தூர், இரணியல், குன்னூரில் 10 மி.மீ. மழையும் பெய்துள்ளது.

Source: சில-இடங்களில்-மழை-வாய்ப்பு/article2564261.ece

No comments:

Post a Comment