Tuesday 9 December 2014

வைகை அணையில் இருந்து இன்று முதல் தண்ணீர் திறப்பு: முதல்வர் உத்தரவு

First Published : 10 December 2014 05:16 AM IST
வைகை அணையில் இருந்து புதன்கிழமை (டிச. 10) முதல் தண்ணீர் திறந்து விட முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து, செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு:
தேனி மாவட்டத்திலுள்ள வைகை அணையில் இருந்து வைகை பழைய பாசன பகுதி 1-ன் கீழுள்ள நிலங்களுக்குப் பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விட விவசாயிகளிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. அவர்களது வேண்டுகோளை ஏற்று, வைகை அணையில் இருந்து புதன்கிழமை முதல் தண்ணீர் திறந்து விட உத்தரவிடப்படுகிறது. இதனால், மதுரை மாவட்டத்திலுள்ள 27 ஆயிரத்து 259 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

Source: வைகை-அணையில்-இருந்து-இன்று-ம/article2564342.ece

No comments:

Post a Comment