பதிவு செய்த நாள்
20ஜன2015
01:00
உடுமலை : உடுமலை வட்டாரத்தில், மக்காச்சோளம் அறுவடை தீவிரமடைந்துள்ளது. விலை சரிவை தடுக்க, ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், டெண்டர் முறை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
உடுமலை, குடிமங்கலம் பகுதியில், பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்தில், 21 ஆயிரத்து 968 ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டது. பொங்கல் பண்டிகைக்கு பின், அறுவடை பணி தீவிரமடைந்துள்ளது. கடந்த சீசனில், மக்காச்சோளம் 100 கிலோ மூட்டைக்கு, 1,200 ரூபாய் வரை விலை கிடைத்தது. சாகுபடி செலவு அதிகரிப்பால், விலை கட்டுப்படியாகாது என கருதிய விவசாயிகள், இருப்பு வைக்க ஆர்வம் காட்டினர். இதனால், உடுமலை, பெதப்பம்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு வரத்து அதிகரித்தது. கடந்த சீசனில் மட்டும், 1,399 மெட்ரிக் டன் மக்காச்சோளம், உடுமலை குடோன்களில் இருப்பு வைக்கப்பட்டது.தற்போது அறுவடை சீசன் துவங்கியுள்ள நிலையில், மக்காச்சோளம் விலை மூட்டைக்கு 1,100 முதல் 1,150 ரூபாய் வரை விலை உள்ளது. கடந்தாண்டை விட விலை குறைவாக இருப்பதால், இருப்பு வைத்து விற்பனை செய்யவே விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். விலை சரிவை தடுக்க, டெண்டர் முறையை அமல்படுத்த ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
உடுமலை, குடிமங்கலம் பகுதியில், பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்தில், 21 ஆயிரத்து 968 ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டது. பொங்கல் பண்டிகைக்கு பின், அறுவடை பணி தீவிரமடைந்துள்ளது. கடந்த சீசனில், மக்காச்சோளம் 100 கிலோ மூட்டைக்கு, 1,200 ரூபாய் வரை விலை கிடைத்தது. சாகுபடி செலவு அதிகரிப்பால், விலை கட்டுப்படியாகாது என கருதிய விவசாயிகள், இருப்பு வைக்க ஆர்வம் காட்டினர். இதனால், உடுமலை, பெதப்பம்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு வரத்து அதிகரித்தது. கடந்த சீசனில் மட்டும், 1,399 மெட்ரிக் டன் மக்காச்சோளம், உடுமலை குடோன்களில் இருப்பு வைக்கப்பட்டது.தற்போது அறுவடை சீசன் துவங்கியுள்ள நிலையில், மக்காச்சோளம் விலை மூட்டைக்கு 1,100 முதல் 1,150 ரூபாய் வரை விலை உள்ளது. கடந்தாண்டை விட விலை குறைவாக இருப்பதால், இருப்பு வைத்து விற்பனை செய்யவே விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். விலை சரிவை தடுக்க, டெண்டர் முறையை அமல்படுத்த ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
Source: http://www.dinamalar.com/news_detail.asp?id=1165002
No comments:
Post a Comment