Tuesday 6 January 2015

மேட்டூர் அணை: மீண்டும் தண்ணீர் திறப்பு

மேட்டூர் அணையில் இருந்து மூன்று மாவட்ட விவசாயத்துக்கு மீண்டும் தண்ணீர் திறந்துவிட முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டார்.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு: மேட்டூர் அணையில் இருந்து புள்ளம்பாடி, புதிய கட்டளை மேட்டு வாய்க்கால்கள் மூலம் தஞ்சாவூர், திருச்சி, அரியலூர் மாவட்டங்களிலுள்ள 42 ஆயிரத்து 736 ஏக்கர் நிலங்களின் பாசனத்துக்காக கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் ஏற்கெனவே தண்ணீர் திறந்து விடப்பட்டது. இப்போது அந்தப் பகுதிகளில் நடவு செய்யப்பட்டுள்ள நெல், விளைச்சலுக்குத் தயாராகாத நிலையில் உள்ளதால் தண்ணீர் திறந்துவிட விவசாயிகளிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. இதை ஏற்று, வரும் புதன்கிழமை முதல் பிப்ரவரி 15-ஆம் தேதி வரை மேலும் 40 நாள்களுக்கு தொடர்ந்து தண்ணீர் திறந்துவிட உத்தரவிடப்படுகிறது என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Source: மேட்டூர்-அணை-மீண்டும்-தண்ணீ/article2607582.ece

No comments:

Post a Comment