பதிவு செய்த நாள்
20பிப்2015
06:44
ஆர்.எஸ்.மங்கலம் : வயலுக்குள் இருக்கும் ஈரப்பதத்தால் விளைந்த நெல்லை அறுவடை செய்வதில் விவசாயிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் அறுவடை செய்யாத நெற்கதிர்கள் மீண்டும் நெல் நாற்றாக முளைத்து விட்டதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள அத்தானூர், காவனூர், துத்தியேந்தல், அடந்தனார் கோட்டை, கருங்குடி, வலமானூர் ஆகிய பகுதிகளில் அக்டோபர் மாதம் விதைப்பு செய்யப்பட்ட நெற்பயிர்கள், ஒரு சில வயல்களில் ஒரே சீராக முளைக்காததால், அப்பகுதிளில் மீண்டும் நெல் விதைப்பு செய்யப்பட்டது. தற்போது அறுவடை சீசனில், மற்ற வயல்களில் நெல் விளைந்த நிலையிலும், ஒரு சில வயல்களில் விளைச்சலுக்கு தயாரான நிலையிலும் உள்ளன. விளைச் சலுக்கு தயாராக இருந்த வயல்களுக்கு இன்னும் தண்ணீர் தேவைப்படுவதால், கண்மாய் நீரை விவசாயிகள் பாய்ச்சினர்.
Source: http://www.dinamalar.com/news_detail.asp?id=1188826
No comments:
Post a Comment