Tuesday 26 May 2015

விவசாயிகளுக்கான தொலைக்காட்சி: இன்று தொடக்கம்

மத்திய அரசின் தூர்தர்ஷன் நிறுவனம் சார்பில் "டி.டி. கிஸான்' என்ற பெயரில் விவசாயிகளுக்கான பிரத்யேக தொலைக்காட்சி அலைவரிசையின் ஒளிபரப்பு சேவையை பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை (மே 26) தொடங்கி வைக்கிறார்.
இதுகுறித்து தில்லியில் மத்திய தகவல், தொழில்நுட்பத்துறை அமைச்சர் அருண் ஜேட்லி செய்தியாளரிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
"டி.டி. கிஸான்' தொலைக்காட்சியின் ஒளிபரப்பை பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை (மே 26) தொடங்கி வைக்கிறார். அனைத்து மாநிலங்களிலும் விவசாயிகள் உள்ளனர். ஆதலால், கேபிள் சட்டத்தின் கீழ் "டி.டி. கிஸான்' தொலைக்காட்சியை கட்டாயமாக அனைத்து கேபிள் நிறுவனங்களும், டி.டி.எச். நிறுவனமும் ஒளிபரப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இது, 24 மணி நேரத் தொலைக்காட்சியாகும் என்றார் ஜேட்லி.

No comments:

Post a Comment