Monday 4 May 2015

புல்லரிக்க வைக்கும் 'புட்பால் லில்லி'

கூடலுார் : கூடலுார் பகுதியில், பந்து போன்று பூத்துள்ள 'புட்பால் லில்லி மலர்கள்', சுற்றுலா பயணிகளை வியப்பில் ஆழ்த்தி வருகிறது.
நீலகிரி மாவட்டம், கூடலுார் பகுதியில் கோடை காலத்தில், பல்வேறு வண்ண மலர்கள் உள்ளூர் மக்களையும், சுற்றுலா பயணிகளையும் கவர்ந்து வருகின்றன. தற்போது, இங்குள்ள தொரப்பள்ளி குணில் பகுதியில், சில வீட்டு தோட்டங்களில், பூத்துள்ள 'புட்பால் லில்லி மலர்கள்' வசீகரிக்கின்றன.'ஸ்காடோஸ் மல்டி பிலோரஸ்' என்ற தாவரவியல் பெயர் கொண்ட இம்மலர்கள், பந்து போன்று காட்சியளிக்கும். பூத்த பின்பு, ஒரு வாரம் வரை வாடாமல் இருக்கும்.

Source: Dinamalar

No comments:

Post a Comment