Monday 4 May 2015

வேளாண் விற்பனையாளர்களுக்கு பயிற்சி


வாலாஜாபாத்: காஞ்சிபுரம் மாவட்ட, வேளாண் இடு பொருட்கள் விற்பனையாளர்களுக்கு பயிற்சி அளிக்க மாவட்ட வேளாண் துறை நிர்வாகம் முடிவு செய்து உள்ளது.148 கூட்டுறவு தொடக்க வேளாண் வங்கிகள்; 260 தனியார் வேளாண் இடு பொருட்கள் விற்பனை நிலையங்கள் என, மாவட்டம் முழுவதும், 408 வேளாண் இடு பொருட்கள் வினியோக மையங்கள் இயங்கி
வருகின்றன. இம்மையங்களில், அடி உரம்; விதை நெல்; மேல் உரம் ஆகிய விற்பனை குறித்து, வேளாண் இடு பொருட்கள் விற்பனையாளர்களுக்கு சிறப்பு பயிற்சி, இம்மாதம் 13ம் தேதி அளிக்கப்பட உள்ளது.இதற்காக, மாவட்ட வேளாண் துறை நிர்வாகம் சார்பில், சிறப்பு விளக்க கையேடு விற்பனையாளர்களுக்கு வினியோகம் செய்யப்பட உள்ளது என, வேளாண் துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Source: Dinamalar

No comments:

Post a Comment