கரூர்: கரூர் வட்டாரத்தில் புகழூர், புங்கோடை, சேமங்கி, முத்தனூர்,
பாலத்துறை உள்ளிட்ட காவிரி பாசன பகுதிகளில் வெற்றிலை சாகுபடி ஆயிரக்கணக்கான
ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. முன்பு நிலத்திற்கு சொந்தக்காரர்களே
சாகுபடி செய்துவந்தனர். காலப்போக்கில் நிலத்தை குத்தகைக்கு விட
தொடங்கியுஙள்ளனர். வெற்றி கொடிக்கால்களுக்கு காவிரியாற்று நீ,ர் பாசன
ஆதாரமாக உள்ளது. புகழூர் பகுதி மற்றும் கரூர் வட்டார பகுதிகளில் உள்ள
கிராமங்களில் விளையும் வெற்றிலைகள் வேலாயுதம்பாளையம் வெற்றிலை மண்டிக்கும்,
வேலுரில் உள்ள தினசரி வெற்றிலை ஏல மார்க்கெட்டிற்கும் விற்பனைக்காக
அனுப்பிவைக்கப்பட்டு வருகின்றன. வெற்றிலை மண்டிகளுக்கு திருச்சி மாவட்டம்
காட்டுப்புத்தூர், மோகனூர், பரமத்தி போன்ற நாமக்கல் மாவட்ட விவசாயிகளும்
விற்பனைக்காக வெற்றிலை கொண்டு வருகின்றனர். இங்கு நடைபெறுகின்ற வெற்றிலை
ஏலத்தில் கலந்துகொள்வதற்காக கரூர், ஈரோடு, திண்டுக்கல், மதுரை போன்ற
ஊர்களில் இருந்து மொத்த வியாபாரிகள் வந்து வெற்றிலை ஏலம் எடுக்கின்றனர்.
லாரிகள் மற்றும் ரயில்கள் மூலம் மேற்கண்ட ஊர்களுக்கு அனுப்பப்படுகிறது.
மேலும் கர்நாடகா, ஆந்திரா, கேரளா உபி, மராட்டியம், உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் வெற்றிலை அனுப்பப்படுகிறது. வறட்சி காரணமாக வெற்றிலை விளைச்சல் குறைந்திருந்த நிலை காவிரியில் நீர்வரத்து காரணமாக நிலைமாறியுள்ளது. தற்போது பெய்த மழையால் வெயில் கொடுமையில் இருந்து வெற்றிலை பயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. காவிரியாற்றுப்பாசனத்தில் இக்கரையில் உள்ள கரூர் மாவட்ட கிராமத்தினர் அக்கரையில் உள்ள நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வெற்றிலை சந்தையில் வெற்றிலை விற்பனை செய்கின்றனர். வெற்றிலை பயிர் சாகுபடி செய்வதற்கு வேளாண்துறையினர் உரிய ஆலோசனைகளை வழங்கி. மானியம் அளிக்க வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. சேரன் மெட்ரிக் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு கரூர்: 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் 2 மற்றும் 3ம் இடங்களை பெற்ற கரூர் வெண்ணைமலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகளை கலெக்டர் பாராட்டினார்.
10ம்வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் வெண்ணைமலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி வேதவர்ஷனி 498 மார்க் பெற்று 2ம்இடம் பெற்றார். 497 மார்க் பெற்று 3ம்இடத்தில், தாரணி, காவியா, பவித்ரா, பிரியதர்ஷினி, விஸ்வபாரதி ஆகியோர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி பெற்ற மாணவிகளை கரூர் கலெக்டர் ஜெயந்தி பாராட்டி பரிசு வழங்கினார். மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திருவளர் செல்வி, மாவட்ட கல்வி அலுவலர் ராஜேந்திரன், பள்ளி ஆலோசகர் செல்வதுரை, தாளாளர் பாண்டியன், முதல்வர் பழனியப்பன் ஆகியோர் பாராட்டினர். சேரன் பள்ளி மாணவர்கள் 561 பேர் தேர்வெழுதி அனைவரும் 100 சதவீத தேர்ச்சி பெற்றனர். ஒவ்வொரு வருடமும் மாநில, மாவட்ட அளவிலான இடங்களை இப்பள்ளி பிடித்து வருகிறது. மேலும் ஆங்கிலம் 2 பேர், கணிதம் 57 பேர், அறிவியல் 270 பேர், சமூக அறிவியல் 165 பேர், என 494 பேர் 100க்கு 100 மார்க் பெற்று தேர்ச்சி பெற்றனர். 72 பேர் 490க்கு மேலும், 187 பேர் 480க்கு மேலும், 270 பேர் 470க்கு மேலும், 325 பேர் 460க்கு மேலும், 374 பேர் 450க்கு மேலும் மார்க் பெற்று சாதனை படைத்துள்ளனர் என பள்ளி முதல்வர் தெரிவித்தார்.
Source : Dhinakaran
மேலும் கர்நாடகா, ஆந்திரா, கேரளா உபி, மராட்டியம், உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் வெற்றிலை அனுப்பப்படுகிறது. வறட்சி காரணமாக வெற்றிலை விளைச்சல் குறைந்திருந்த நிலை காவிரியில் நீர்வரத்து காரணமாக நிலைமாறியுள்ளது. தற்போது பெய்த மழையால் வெயில் கொடுமையில் இருந்து வெற்றிலை பயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. காவிரியாற்றுப்பாசனத்தில் இக்கரையில் உள்ள கரூர் மாவட்ட கிராமத்தினர் அக்கரையில் உள்ள நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வெற்றிலை சந்தையில் வெற்றிலை விற்பனை செய்கின்றனர். வெற்றிலை பயிர் சாகுபடி செய்வதற்கு வேளாண்துறையினர் உரிய ஆலோசனைகளை வழங்கி. மானியம் அளிக்க வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. சேரன் மெட்ரிக் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு கரூர்: 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் 2 மற்றும் 3ம் இடங்களை பெற்ற கரூர் வெண்ணைமலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகளை கலெக்டர் பாராட்டினார்.
10ம்வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் வெண்ணைமலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி வேதவர்ஷனி 498 மார்க் பெற்று 2ம்இடம் பெற்றார். 497 மார்க் பெற்று 3ம்இடத்தில், தாரணி, காவியா, பவித்ரா, பிரியதர்ஷினி, விஸ்வபாரதி ஆகியோர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி பெற்ற மாணவிகளை கரூர் கலெக்டர் ஜெயந்தி பாராட்டி பரிசு வழங்கினார். மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திருவளர் செல்வி, மாவட்ட கல்வி அலுவலர் ராஜேந்திரன், பள்ளி ஆலோசகர் செல்வதுரை, தாளாளர் பாண்டியன், முதல்வர் பழனியப்பன் ஆகியோர் பாராட்டினர். சேரன் பள்ளி மாணவர்கள் 561 பேர் தேர்வெழுதி அனைவரும் 100 சதவீத தேர்ச்சி பெற்றனர். ஒவ்வொரு வருடமும் மாநில, மாவட்ட அளவிலான இடங்களை இப்பள்ளி பிடித்து வருகிறது. மேலும் ஆங்கிலம் 2 பேர், கணிதம் 57 பேர், அறிவியல் 270 பேர், சமூக அறிவியல் 165 பேர், என 494 பேர் 100க்கு 100 மார்க் பெற்று தேர்ச்சி பெற்றனர். 72 பேர் 490க்கு மேலும், 187 பேர் 480க்கு மேலும், 270 பேர் 470க்கு மேலும், 325 பேர் 460க்கு மேலும், 374 பேர் 450க்கு மேலும் மார்க் பெற்று சாதனை படைத்துள்ளனர் என பள்ளி முதல்வர் தெரிவித்தார்.
Source : Dhinakaran
No comments:
Post a Comment