மத்திய அரசின் தூர்தர்ஷன் நிறுவனம் சார்பில் 'டி.டி. கிஸான்' என்ற பெயரில் விவசாயிகளுக்கான பிரத்யேக தொலைக்காட்சி அலைவரிசையின் ஒளிபரப்பு சேவையை பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை (மே 26) தொடங்கி வைத்தார்.
அனைத்து மாநிலங்களிலும் விவசாயிகள் உள்ளனர். ஆதலால், கேபிள் சட்டத்தின் கீழ் 'டி.டி. கிஸான்' தொலைக்காட்சியை கட்டாயமாக அனைத்து கேபிள் நிறுவனங்களும், டி.டி.எச். நிறுவனமும் ஒளிபரப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
தூர்தர்ஷன் சார்பில் தொடங்கப்பட்டுள்ள இந்த தொலைக்காட்சி சேவை டி.டி. கிஸான் என்றும் பெயரில் 24 மணி நேர ஒளிபரப்பு சேவையாக இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு பயன் தரும் வகையில் நிகழ்சிகள் தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source : Dhinamani
No comments:
Post a Comment