இயற்கை உரத்துக்காக வேதாரண்யம் பகுதி நெல் தரிசில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சணப்பை பயிர்கள் தற்போது பூத்துக் குலுங்குகின்றன.
சணல் என்று அழைக்கப்படும் சணப்பை பயிர் விவசாயத்துக்கு மிகச் சிறந்த இயற்கை உரமாகப் பயனளிக்கிறது. இதன் வேர் முடிச்சுகள் மூலம் கிடைக்கும் உயிர்ச் சத்துகள் மண்ணை வளமாக்கி,பயிர்களுக்கு ஊக்கமளிக்கிறது.
இந்தப் பயிரின் தண்டிலிருந்து கிடைக்கும் பஞ்சில் (இழை) கயிறு போன்றவை தயாரிக்கப்படுகின்றன.
நெல் சாகுபடிக்கு முன்னதாக சணல் பயிரிடப்பட்டு, பூப்பதற்கு முன்பாகவே வயலில் அவற்றை மடக்கி உழவு செய்து பசுந்தாள் உரமாக விவசாயிகள் பயன்படுத்துக்கின்றனர். மானாவாரி நிலப்பரப்பான வேதாரண்யம் பகுதியில் தகட்டூர்,பஞ்சநதிக்குளம்,மருதூர், ஆயக்காரன்புலம் போன்ற கிராமங்களில் விவசாயிகள் சணப்பையை பசுந்தாள் உரமாகவும்,மறு உற்பத்திக்காக விதைகளைச் சேகரிக்கவும் சாகுபடி செய்துள்ளனர். அவை தற்போது மஞ்சள் நிறத்தில் பூத்துக் குலுங்குகின்றன. கொத்துக் கொத்தாக காணப்படும் பூக்களும்,அதன் காய்கள் முற்றிய பின்னர் காற்றில் அசையும்போது ஏற்படும் ஒருவித ஓசையும் காண்போரை ஈர்க்கின்றன.
No comments:
Post a Comment