Tuesday 26 May 2015

நாடு, ஏலக்கி ரக வாழைகளைத் தாக்கும் வாடல் நோய்

நாடு மற்றும் ஏலக்கி ரக வாழைகளைத் தாக்கும் வாடல் நோயை கட்டுப்படுத்த வேளாண் துறை ஆலோசனை வழங்கியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள வாழையில் குறிப்பாக நாடு மற்றும் ஏலக்கி ரகங்களில் புதிய வகை வாடல் நோய் தாக்குதல் காணப்படுகிறது. இந்நோய் தாக்கப்பட்டு குலை தள்ளும் நிலையிலுள்ள வாழை மரங்களில் இலைகள் பழுத்து காணப்படும். வாழை மரத்தை தொட்டவுடன் இற்று போய் சாய்ந்து விடும்.
எனவே நோய் தாக்கப்பட்ட மரங்களை வேருடன் அகற்றி விட்டு குழிகளில் 50 கிராம் வீதம் பிளீச்சிங் பவுடர் தூவ வேண்டும். அருகிலுள்ள மரங்களுக்கு இந்நோய் பரவாமல் தடுக்கும் வகையில் ஒரு லிட்டருக்கு 10 கிராம் பிளீச்சிங் பவுடர் என்ற அளவில் கலந்து மரத்தைச்சுற்றி ஊற்ற வேண்டும். இந்நோய் விரைவில் பரவும் தன்மையுள்ளதால் வாழை விவசாயிகள் இதில் கூடுதல் கவனம் செலுத்தி நோயை கட்டுப்படுத்துவது மிக முக்கியமானதாகும்.
இது தொடர்பாக மேலும் விளக்கம் பெற அருகாமையிலுள்ள தோட்டக்கலைத் துறை வட்டார மையங்களின் களப்பணியாளர்களை அணுகலாம் என்று தோட்டக்கலை துணை இயக்குநர் (பொ) பொ.மணிமொழி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment