Wednesday 1 July 2015

நாட்டுக் கோழி வளர்ப்புக்கு மானியம்


பெரியகுளம், உத்தமபாளையம் வட்டாரங்களில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் நாட்டுக் கறிக்கோழி வளர்ப்புக்கு மானியம் வழங்கப்பட உள்ளது.
     இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
  பெரியகுளம், உத்தமபாளையம் ஆகிய வட்டாரங்களுக்கு உள்பட்ட 8 ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில், நாட்டுக் கறிக் கோழி வளர்ப்பில் ஈடுபடும் 160 பேருக்கு கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் நபார்டு வங்கி மூலம் மானியம் மற்றும் ஊக்கத் தொகை வழங்கப்பட உள்ளது.
  நாட்டுக் கறிக் கோழி வளர்ப்பில் ஈடுபடுபவர்களுக்கு வங்கிக் கடன் மற்றும் பயிற்சி அளிக்கப்படும்.
   இது குறித்த விவரங்களை சம்மந்தப்பட்ட பகுதிகளில் உள்ள கால்நடை மருந்தகங்களில் கால்நடை உதவி மருத்துவர்களை தொடர்பு கொண்டு தெரிந்து கொண்டு, மானிய உதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


http://www.dinamani.com/edition_madurai/theni/2015/07/01/நாட்டுக்-கோழி-வளர்ப்புக்கு-/article2895433.ece

No comments:

Post a Comment