தமிழகத்தில், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், ஈரோடு உள்ளிட்ட சில மாவட்டங்களில் மட்டுமே, கேரட், முட்டைக்கோஸ் சாகுபடி செய்யப்படுகிறது. இவற்றின் தேவை அதிகம். இருப்பினும், விளைச்சல் போதுமான அளவில் சீராக இருப்பதில்லை. அதனால், கர்நாடகா, ஆந்திராவில் இருந்து, இந்த வகை காய்கறிகளை கொண்டுவர வேண்டியுள்ளது.வீரியமிக்க கேரட், முட்டைக்கோஸ்கள், குளிர் பிரதேசம் மற்றும் மலைப்பாங்கான பகுதிகளில் மட்டுமின்றி, பெரம்பலுார் போன்ற வெப்பம் மிகுந்த மாவட்டங்களிலும் விளையும் என, கண்டறியப்பட்டு உள்ளது. அதனால், மதுரை மற்றும் காரைக்குடி பகுதிகளில் முட்டைகோஸ் மற்றும் கேரட் விளையுமா என விவசாயிகள் ஆர்வத்துடன் எதிர்பார்க்கின்றனர்.எனவே, முட்டைக்கோஸ் மற்றும் கேரட் உற்பத்தியை அதிகரிக்க, தோட்டக்கலைத் துறை திட்டமிட்டு உள்ளது. இதற்காக, தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமையான, ‘டான்ஹோடா’ மூலம், அவற்றின் வீரியமிக்க விதைகள் கொள்முதல் செய்யப்பட உள்ளன.
மானிய விலையில்...‘டான்ஹோடா’ அதிகாரி ஒருவர் கூறியதாவது:82 கிலோ முட்டைக்கோஸ் விதைகள்; 1,025 கிலோ கேரட் விதைகள் என, மொத்தம், 1,107 கிலோ விதைகள் கொள்முதல் செய்யப்படும். இதற்காக, 1.84 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.இந்த விதைகள், 2014 – 15 முழுவதும், விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும். விதை கொள்முதல் ஒப்பந்ததாரர் தேர்வு விரைவில் நடக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.– நமது நிருபர் –
Source: http://business.dinamalar.com/news_details.asp?News_id=31923&cat=1
மானிய விலையில்...‘டான்ஹோடா’ அதிகாரி ஒருவர் கூறியதாவது:82 கிலோ முட்டைக்கோஸ் விதைகள்; 1,025 கிலோ கேரட் விதைகள் என, மொத்தம், 1,107 கிலோ விதைகள் கொள்முதல் செய்யப்படும். இதற்காக, 1.84 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.இந்த விதைகள், 2014 – 15 முழுவதும், விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும். விதை கொள்முதல் ஒப்பந்ததாரர் தேர்வு விரைவில் நடக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.– நமது நிருபர் –
Source: http://business.dinamalar.com/news_details.asp?News_id=31923&cat=1
No comments:
Post a Comment