Friday 17 July 2015

குழித்தட்டு முறையில் காய்கறி சாகுபடி பயிற்சி

கொள்ளிடம், :  நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள சந்தப்படுகையில் தோட்டக்கலை பயிர் சாகுபடியாளர்களுக்கு உழவர் வயல்வெளிப்பள்ளி துவக்க விழா நடந்தது.ஆணைக்காரன்சத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் ஏஷான்பீவி தலைமை வகித்தார். கொள்ளிடம் உதவி தோட்டக்கலை அலுவலர் செல்வராஜ் வரவேற்றார். உழவர் வயல்வெளிப்பள்ளியின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்து தோட்டக்கலை உதவி இயக்குனர் கணேசன் விளக்கினார். 
6 வாரங்கள் நடைபெறும் இப்பயிற்சி  வியாழக்கிழமை தோறும் நடைபெறும். முதல் நாளில் குழித்தட்டு முறையில் காய்கறி பயிர் நாற்றங்கால் அமைப்பது பற்றி செயல்விளக்கம் செய்து, அதன் பயன்கள் பற்றி நாகை தோட்டக்கலை அலுவலர் கண்ணன் விளக்கமாக எடுத்துரைத்தார். வரும் பயிற்சி நாட்களில் ஒருங்கிணைந்த பயிர்பாதுகாப்பு, பசுமை குடில் அமைத்து காய்கறி சாகுபடி செய்தல் குறித்து விபரங்கள் தெரிவிக்கப்படும். உதவி தோட்டக்கலை அலுவலர் ஜான்கென்னடி நன்றி கூறினார். 

உழவர் பயிற்சி பள்ளிக்கான ஏற்பாடுகளை உதவிதோட்டகலை அலுவலர்கள் கல்யாணம், குமரேசன், முன்னோடி விவசாயி பன்னீர்செல்வம் ஆகியோர் செய்திருந்தனர். பயிற்சியில் காய்கறி சாகுபடி செய்யும் 25 விவசாயிகள் கலந்து கொண்டனர். 

Source : Dhinakaran

நிரந்தர உற்பத்தி, வளர்ச்சிக்கு விதையின் தரமறிந்து விதைக்க விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

புதுக்கோட்டை, :  புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் வேளாண்மையில் நிரந்தர உற்பத்தி மற்றும் வளர்ச்சிக்கு விதையின் தரம் அறிந்து விதைக்க வேண்டும் என வேளாண் அலுவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதுகுறித்து புதுக்கோட்டை விதை பரிசோதனை நிலைய வேளாண் அலுவலர்கள் கண்ணன் மற்றும் நளினி விடுத்துள்ள செய்திக்குறிப்பு: வேளாண்மையின் உற்பத்திக்கு விதை அடிப்படையான இடு பொருளாகும். உழவர்களுக்கு தரமான விதைகள் கிடைக்க செய்வதற்காக தமிழ்நாடு அரசு விதைச் சான்றளிப்புத் துறையின் கீழ் விதை சான்றளிப்பு, விதை ஆய்வு, விதை பரிசோதனை மற்றும் பயிற்சி ஆகிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவற்றுள் புதுகை மாவட்ட விவசாயிகள் விதையின் தரத்தை அறிந்துகொள்ளும் வகையில், மாவட்டத்தில் 30, ராமலிங்கம் தெரு, திருக்கோகர்ணம் புதுகை என்ற முகவரியில் விதைப் பரிசோதனை நிலையம் செயல்பட்டு வருகிறது.

 விதையின் தரத்தை அறிய விதைப்பரிசோதனை செய்யப்படுகிறது. இப்பரிசோதனையில் முளைப்புத்திறன், புறத்தூய்மை, ஈரப்பதம் மற்றும் பிற ரக கலப்பு கண்டறியப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. விதைச்சட்டம் 1966 மற்றும் விதைகள் கட்டுப்பாட்டு ஆணை 1983 உரிய முறையில் செயல்படுத்த விதை பரிசோதனை திட்டம் அவசியமானது. புதுகை விதை பரிசோதனை நிலையம் ஒரு அறிவிக்கப்பட்ட விதை பரிசோதனை நிலையமாக செயல்பட்டு வருகிறது.
 இப்பரிசோதனை நிலையத்தில் சான்று விதை, ஆய்வாளர் விதை மட்டுமல்லாமல் உழவர்களிடமிருந்தும், விற்பனையாளர்களிடமிருந்தும், விதை உற்பத்தியாளர்களிடமிருந்தும் பெறப்படும் பணி விதை மாதிரிகளும் ஆய்வு செய்யப்படுகின்றது. விதை பரிசோதனை முடிவுகள் தங்கள் இருப்பிடத்திற்கே அனுப்பி வைக்கப்படும்.

 வருகிற ஆடிப்பட்டத்தில் காய்கறி சாகுபடி பணிகள் துவங்கப்பட உள்ளது. எனவே, புதுகை மாவட்டத்தில் உள்ள காய்கறி சாகுபடியாளர்கள் விதை விற்பனையாளர்கள் மற்றும் விதை உற்பத்தியாளர்கள் தங்கள் கைவசம் உள்ள காய்கறி விதைகளை பரிசோதனை செய்து விதைப்பதன் மூலம் அதிக மகசூல் பெற முடியும். கத்திரி, மிளகாய், தக்காளி ஆகிய பயிர்களுக்கு 10 கிராம் விதையளவும், வெண்டை, கொத்தவரை, முள்ளங்கி ஆகிய பயிர்களுக்கு 100 கிராம் அளவில் ஆய்வுக்கு அனுப்ப வேண்டும். ஒவ்வொரு பயிருக்கும் தனித்தனியே  துணிப்பையினுள் இட்டு சிப்பம் கட்ட வேண்டும். துணிப்பையினுள் முகவரி பயிர் மற்றும் தேவையான பரிசோதனை விபரங்களை கொண்ட விபரத்தாள் வைக்கப்பட வேண்டும். விதைப் பரிசோதனைக் கட்டணமாக ஒரு விதை மாதிரிக்கு ரூ.30 வீதம் செலுத்தி தரமறிந்து விதைக்க வேண்டும். இவ்வாறு அதில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Source : dhinakaran

முளைப்பு திறன் குறைந்தால் நெற்பயிர் மகசூல் பாதிக்கும் வேளாண் அலுவலர் ஆலோசனை :


கரூர்,: முளைப்பு திறன் குறைந்தால் பயிர் மகசூல் பாதிக்கும் என வேளாண் அலுவலர் தெரிவித்துள்ளார். கரூர் காந்திகிராமம் விதைப் பரிசோதனை ஆய்வக மூத்த வேளாண்மை அலுவலர் தாகூர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:விவசாயத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இடுபொருள் விதை, தரமான விதைகளை விதைப்பதன் மூலமே அதிக மகசூல் பெற முடியும். தரமான விதை என்பது விதைச்சான்று துறையினரால் பல கட்டங்களில் வயல்மட்ட ஆய்வு மற்றும் விதைப்பரிசோதனை செய்யப்பட்ட சான்று விதைகளே ஆகும். விதைப் பரிசோதனை நிலையத்தில் புறத்தூய்மை, ஈரப்பதம், முளைப்புத்திறன், பிறரக கலப்பு என 4 விதமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. 

புறத்தூய்மை என்பது விதையின் சுத்தத்தை குறிப்பதாகும். அதில், களை விதைகள், பிற பயிர் விதைகள், உயிர்ப்பற்ற பொருள் ஆகியவை பரிசோதிக்கப்படுகிறது. ஈரப்பதம் என்பது பயிர் வாரியாக ஈரப்பதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில், நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருப்பதால் அதிக பூச்சி தாக்குதல் மற்றும் நுண்ணுயிர் தாக்குதலுக்கு உட்பட்டு தரம் குறைய வாய்ப்புள்ளது. முளைப்புத்திறன் பரிசோதனையின் விதை மாதிரிகளின் முளைப்புத்திறன் பரிசோதிக்கப்படுகிறது. ஒவ்வொரு விதைக்கும் குறிப்பிட்ட முளைப்புத்திறன் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முளைப்புத்திறன் குறைந்தால் பயிர் எண்ணிக்கை குறைந்து மகசூல் பாதிக்கும். பிறரக கலப்பு என்பது ஒரே பயிரில் பல்வேறு ரக விதைகள் கலந்திருப்பது ஆகும். குறிப்பிட்ட அளவுக்கு மேல் பிறரக கலப்பு இருந்தால் விதைகள் விற்பனைக்கு பரிந்துரைக்கப்படுவதில்லை. இதன் மூலம் வேளாண்மை துறையினரால் விதைப்பண்ணை அமைக்கப்பட்டு உற்பத்தி செய்யப்படும் விதைகளுக்கும், தனியார் உற்பத்தியாளர்களின் விதைகளுக்கும், விதைப்பரிசோதனை அடிப்படையிலேயே சான்று அளிக்கப்படுகிறது. இதன் மூலம் தரமான விதைகளை உற்பத்தி செய்து விற்பனை செய்ய பரிசோதனை முடிவுகள் பயன்படுகின்றன.

விவசாயிகள், விதை விற்பனையாளர்கள், உற்பத்தியாளர்கள் தங்களிடம் இருப்பில் உள்ள விதைகளின் தரத்தை அறிய பகுப்பாய்வு முடிவுகள் பயன்படுகிறது. விதைப்பரிசோதனை ஆய்வுக்கட்டணமாக பணி விதை மாதிரி ஒன்றுக்கு ரூ.30மட்டுமே வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணத்தை நேரிலோ அல்லது மணிஆர்டர் மூலமாகவோ வேளாண்மை அலுவலர், விதைப்பரிசோதனை நிலையம், இரண்டாவது குறுக்குத்தெரு, திண்ணப்பா நகர், காந்திகிராமம் கரூர்4 என்ற முகவரிக்கு அனுப்பலாம்.பணி விதைமாதிரிகள் விதைப்பரிசோதனை நிலையத்திற்கு பகுப்பாய்விற்கு அனுப்பும் போது, விதை மாதிரியின் அளவு கம்பு, பனிவரகு, ராகி, முள்ளங்கி, கீரை விதைகள், எள் போன்ற சிறிய அளவிலான விதைகள் எனில் சுமார் 50கிராம் அளவுக்கு குறையாமலும், நெல், மக்காச்சோளம், உளுந்து, பயறு வகைகள் போன்ற பெரிய அளவிலான விதைகளாக இருந்தால் சுமார் 150 கிராமிற்கு குறையாமலும் அனுப்ப வேண்டும். விதை மாதிரிகளை துணிப்பை அல்லது பாலித்தீன் பைகளில் விதைகளை இட்டு பகுப்பாய்வு முடிவுகளுக்கு  அனுப்ப வேண்டிய முகவரி, பயிர் ரகம், குறியீட்டு எண், விதை அளவு ஆகிய விவரங்கள் அடங்கிய சீட்டை இணைத்து அனுப்ப வேண்டும் என கருர் விதைப்பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் தாகூர் தெரிவித்துள்ளார்.
Source : dhinakaran

இன்றைய வேளாண் தமிழ் நாளிதழ் செய்திகள் :

Please visit the following link:
http://agritech.tnau.ac.in/daily_events/2015/tamil/july/17_july_15_tam.pdf

Agriculture related English news :


Please visit the following link:
http://agritech.tnau.ac.in/daily_events/2015/english/july/17_july_15_eng.pdf

Thursday 16 July 2015

இன்றைய வேளாண் தமிழ் நாளிதழ் செய்திகள் :


Please visit the following visit:
http://agritech.tnau.ac.in/daily_events/2015/tamil/july/16_july_15_tam.pdf

Agriculture related English news :


Please visit the following link:
http://agritech.tnau.ac.in/daily_events/2015/english/july/16_july_15_eng.pdf

Wednesday 15 July 2015

Tuesday 14 July 2015

Statement of the Honble Chief Minister on release of water for irrigation from Vaigai Dam, Theni District and Amaravathi Dam, Tiruppur District :

ஆடிப்பட்ட வீலை மூன்னறிவிப்பு

Price Forecast for Aadipattam :

இன்றைய வேளாண் தமிழ் நாளிதழ் செய்திகள் :

Agriculture related English news :

Monday 13 July 2015

Community e-Radio program - 13.07.2015

Agriculture related English news :

இன்றைய வேளாண் தமிழ் நாளிதழ் செய்திகள் :

Price Forecast for Aadipattam

ஆடிப்பட்ட வீலை மூன்னறிவிப்பு

QUALITY TURMERIC WILL FETCH GOOD PRICE


Please click below link for details

Signing of MoU for Developing Safer Pest Control Technologies

TNAU Developed more Crop Boosters to improve yield, Growth and Quality of Crop

Wednesday 8 July 2015

பயிர் பாதுகாப்பு - தென்னை பயிரைத் தாக்கும் பூச்சிகள்:

Please visit the following link :


http://agritech.tnau.ac.in/ta/crop_protection/crop_prot_crop_insect_oil_coconut_tamain.html

Crop protection – pest of coconut :

Please visit the following link:

http://agritech.tnau.ac.in/crop_protection/crop_prot_crop_insect_oil_coconutmain.html

பண்ணை சார் தொழில்கள் - காளான் பற்றிய விவரங்கள் :



http://agritech.tnau.ac.in/ta/farm_enterprises/Farm%20enterprises_%20Mushroom_ta.html

Farm enterprise – Related contents of Mushroom :

Please visit the following link :

http://agritech.tnau.ac.in/farm_enterprises/Farm%20enterprises_%20Mushroom.html

வேளாண் துறை செய்திகள் :

Agriculture related English news :

Please visit the following link :

http://agritech.tnau.ac.in/daily_events/2015/english/july/09_july_15_eng.pdf

தகவல் மற்றும் தொலை தொடர்பு ஆராய்ச்சி ஆய்வுகள் மற்றும் ஆவணங்கள் :

ICT Research Studies and Papers :

Please click the following link :

http://www.agritech.tnau.ac.in/ict_research_articles&papers.html

இன்றைய வேளாண் தமிழ் நாளிதழ் செய்திகள் :

Please click the following link : 

http://agritech.tnau.ac.in/daily_events/2015/tamil/july/08_july_15_tam.pdf

Daily newspaper - Agri related english news :

Please visit the webpage
http://www.agritech.tnau.ac.in/daily_events/2015/english/july/08_july_15_eng.pdf

Sell Summer Cotton Immediately Upon Harvest



Please view the following website :

Seed Stock Position as on 06.07.2015 :

Monday 6 July 2015

Mobile-based services to help farmers


VIJAYAWADA (AP) FRIDAY, 30/07/2010: _A farmer tilling the land for kharif sowings takes a break to strike a conversation on his mobile phone, at Kundavari kandrika near Vijayawada. _ PHOTO: RAJU_V. (DIGITAL MAGE)
Mobile based services for farmers and other stakeholders being delivered through organisations, departments and offices of Central and State Governments down to the block level (including State Agriculture Universities, Krishi Vigyan Kendras, Agro-Meteorological Field Units) have been brought together under a single umbrella, namely, mKisan portal of the Ministry of Agriculture, Government of India. The URL iswww.mkisan.gov.in.
mKisan portal subsumes all mobile-based initiatives in the field of agriculture and allied sectors, according to Department of Agriculture Co-operation. It brings together SMS (both push and pull), interactive voice response system, unstructured supplementary services of data or USSD (which is essentially an interactive SMS and can facilitate data entry and query on web portals without Internet), mobile apps and services.


Source: 

TNAU Student Ranks Top in JNU-DBT Combined Entrance Examination

Undergraduate Admissions 2015 -16 Admission Status Upto C15 & C16


Further details please click below link

மரவள்ளி கிழங்கு பயிரில் மஞ்சள் தேமல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறை வேளாண் அதிகாரி வழிகாட்டல்


தோகைமலை, : மரவள்ளி கிழங்கு பயிரில் மஞ்சள் தேமல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறை குறித்து தோட்டக்கலை துறை அதிகாரி விளக்களித்துள்ளார்.
இது குறித்து தோகைமலை தோட்டக்கலை உதவி இயக்குநர் ராஜேந்திரன் தெரிவித்திருப்பதாவது: தோகைமலை பகுதி விவசாயிகள் மரவள்ளி கிழங்கு சாகுபடியில் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதில் மரவள்ளியில் மஞ்சள் தேமல் நோய் பெருமளவில் பரவி வருவதால் விளைச்சல் குறைந்து விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும் நிலை உள்ளது. மரவள்ளியில் தோன்றும் தேமல் நோய் ஜெமினி வைரஸ் எனப்படும் ஒரு வகை நச்சுயிரியால் உண்டாகிறது. இந்த நச்சுயிரியால் சுமார் 80 சதவீதம் வரை விளைச்சல் இழப்பு ஏற்படும். இந்த நோயால் இலையின் மேற்பரப்பில் மஞ்சள் நிறப் பகுதிகளும், பச்சைநிற பகுதிகளும் உண்டாகி தேமல் போன்ற தோற்றத்தை அளிக்கும். இந்த நோய் தாக்குதல் அதிகமாகும் பொழுது இலைகள் வடிவமிழந்து குறுகி, சிறுத்து சுருங்கி, உருமாறி தோற்றமளிக்கும். இந்த நோய் ஒரு செடியில் இருந்து மற்றொரு செடிக்கு வெள்ளை ஈ என்ற பூச்சிகளால் பரவுகிறது. அதுவும் கோடைக்காலங்களில் இவ்வகை வெள்ளை ஈக் கள் சுறுசுறுப்பாக இயங்குவதால் இந்நோய் தாக்கம் அதி கமாக தென்படும். நோய் கண்ட செடிகளின் இலைகளிலிருந்து வெள்ளை ஈக்கள் இலைச் சாற்றை உறிஞ்சும் போது நச்சுயிரியின் துணுக்கள் ஈக்களின் உறிஞ்சு குழலில் ஒட்டிக்கொண்டு, பின்பு அதே ஈக்கள் நோயற்ற ஆரோக்கியமான செடிகளுக்கு சென்று இலைச்சாற்றை உறிஞ்சும் போது அந்த செடிகளுக்கும் நோய் பரவுகிறது.
இந்த வகை நோயை கட்டுப்படுத்த நோய் தாக்காத ஆரோக்கியமான விதை குச்சிகளை கவனமாக தேர்வு செய்து பயன் படுத்த வேண்டும். நோய் தாக்கிய செடிகளை அவ்வப்போது அகற்றி எரித்து வயலை மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். தானே முளைத்து வளரும் மரவள்ளிச் செடிகள் இந்நோயை உண்டாக்கும் கிருமிக்கு, அடைக்கலம் அளித்து நோய் பரவக் காரணமாவதால் அவற்றை அழித்து விடவேண்டும். வரப்புகளில் வளரும் செடிகளையும் அகற்ற வேண்டும். மேலும் அறுவடைக்குப் பின் மரவள்ளியின் எஞ்சிய பாகங்களான வேர், சிறு கிழங்குகள், குச்சிகள் ஆகியவற்றை முழுவதும் அகற்றி விடவேண்டும். வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த ஊடுருவிப் பாயும் பூச்சிக் கொல்லி மருந்துகளான மீதைல் டெமட்டான் அல்லது டைமித்தோயேட் போன்றவற்றை தெளித்து வயலில் வெள்ளை ஈக்கள் பரவுவதை கட்டுப்படுத்தலாம். மேலும் ஏக்கருக்கு 5 என்ற அளவில் மஞ்சள் நிற ஒட்டுப் பொறி வைத்து வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்தலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=468977&cat=504


விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் பண்ணை வைப்பவர்களுக்கு மானியத்தில் கோழி குஞ்சுகள்


காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் கலெக்டர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் பெண்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில் 2015-16ம் ஆண்டு நாட்டுக்கோழி வளர்ப்புதிட்டம் காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி நாட்டுக்கோழி பண்ணை வைப்பவர்களுக்கு 250 குஞ்சுகள் வழங்கப்படும். 
இதற்கு மானிய தொகையாக ரூ.37,375  வழங்கப்படும். நாட்டுக்கோழி வளர்க்க விரும்புவோர் அருகேயுள்ள கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்காக, குடும்ப அட்டை நகலுடன் சம்பந்தப்பட்ட ஊராட்சி மற்றும் பகுதியில் உள்ள வங்கி மேலாளரிடம் கடன் பெறுவதற்கான அனுமதி கடிதம் இணைக்கப்படவேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். எனவே, விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Friday 3 July 2015

Strengthening of ICT in value chains

Google, Tata Trusts roll out bicycles to teach internet to rural women


1435924103-4892.gif


Google India has joined hands with Tata Trusts, the charity arm of Tata Group, to educate rural women about internet by sending 1,000 specially- designed bicycles equipped with internet devices into remote villages.

Each of these bicycles will be operated by “Internet Saathis” trained by Google and the target is to train about 500,000 Indian women in the next 18 months. The internet mogul is terming the initiative a step towards the Digital India vision of the country.

“While women are making rapid progress on adoption of internet in urban areas, women in rural areas are getting left behind. Today, only 12 per cent of Internet users in rural India are women while in urban areas it is 50 per cent. We need to come together to address this challenge and empower women in rural India through trainings and programmes that can transform their lives,” said Rajan Anandan, managing director of Google Southeast Asia and India.

The initiative will kick off from Gujarat, Rajasthan and Jharkhand and will be rolled out across the country eventually reaching out to over 4,500 villages and five lakh women across rural India over the next eighteen months.

The internet cart would be available in a village for a minimum of two days every week for over a period of four to six months.Once the cart has completed the training in a cluster of three villages, it will be moved to the adjoining cluster for completion of a similar cycle.
Tata Trusts chairman Ratan Tata said it is a privilege to associate with Google.

“In addition to access, the internet has brought dignity and self respect to poor people. I am delighted that the Prime Minister of India is putting on that India needs to digitised. Google as a company has digitised the world and it’s a privilege to work with them towards bringing women online,” Tata said.

Google had launched a similar programme last year through a tricycle cart. However, since it faced difficulties in steering the cart, it turned to bicycles and teamed up with Tata Trusts, which will manage the on ground rollout with its partners whereas Google will invest in providing bicycles and training content.

பருவநிலை மாற்றத்திற்கு ஏற்றமீள் தன்மை வேளாண் திட்டம்


திண்டிவனம்: பருவநிலை மாற்றத்திற்கு ஏற்ற மீள் தன்மையுள்ள வேளாண்மை திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்தது.தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், திண்டிவனம் வேளாண் அறிவியல் நிலையம் இணைந்து, பருவநிலை மாற்றத்திற்கு ஏற்ற மீள்தன்மையுள்ள வேளாண்மை திட்டங்களை 2010 ம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது.இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகத்தின் வழி காட்டுதல்படி, செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் சிறப்பு அம்சமாக, வேளாண் பொறியியல் துறையுடன் இணைந்து, இயற்கை வள மேம்பாட்டின் கீழ் சிறு பாசன ஏரி மற் றும் நீர் வரத்து வாய்க்கால் சீரமைக்கும் பணி, வறட்சி கிராமம் காட்டுசிவிறி தேர்வு செய்யப்பட்டுள்ளது.கடந்த ஏப்ரல் மாதம் துவங்கிய வரத்துவாய்க்கால் சீரமைப்பு, ஏரி தூர் வாருதல் மற்றும் அமிழ்வு நீர் குட்டை ஆகிய பணிகள் நிறைவடைந்துள்ளது. இதன்மூலம் பாசன கிணறுகளின் நீர்மட்டம் உயர்ந்தது.இப்பணியின் செயல்பாடு குறித்து காட்டுசிவிறி மக்களுக்கான விளக்க நிகழ்ச்சி நடந்தது. 

திண்டிவனம் எண்ணெய்வித்து ஆராய்ச்சி நிலைய தலைவர் முனைவர் வைத்தியநாதன் தலைமை தாங்கினார். பல்கலைக்கழக இயக்குனர் முனைவர் பிலீப் விளக்க உரையாற்றினார். ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஷீபா வரவேற்றார். திண்டிவனம் கோட்ட வேளாண் பொறியியல் துறை சார்லஸ், முருகன், புண்ணியமூர்த்தி உள்ளிட்ட குழுவினர், திண்டிவனம் வேளாண் அறிவியல் நிலைய முனைவர்கள் கவிதா, சங்கீதா, ஜெயராமச்சந்திரன், மயிலம் ஒன்றிய வேளாண் உதவி இயக்குனர் ராஜசேகரன், தோட்டக்கலை அலுவலர் வெங்கடேசன், ஊராட்சி துணைத் தலைவர் சீனிவாசன், முன்னோடி விவசாயி மணிவேலன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முனைவர் பாலுமகேந்திரன் நன்றி கூறினார்.



Source:

தேசிய ஆன்லைன் விவசாய சந்தை உருவாக்கம் ரூ.50 ஆயிரம் கோடியில் நீர்ப்பாசன திட்டம் மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி,
ரூ.50 ஆயிரம் கோடியில் நீர்ப்பாசன திட்டம் அமல்படுத்தப்படும்; தேசிய ஆன்லைன் விவசாய சந்தை உருவாக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
ரூ.50 ஆயிரம் கோடி திட்டம்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிகள் குழு, டெல்லியில் நேற்று முன்தினம் (புதன்கிழமை) கூடியது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து நிதி மந்திரி அருண் ஜெட்லி, நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
நாட்டில் உள்ள விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதி அளிப்பதற்கான பிரதான் மந்திரி கிரிஷி சின்சாய் யோஜனா திட்டத்தின் கீழ், அடுத்த 5 ஆண்டுகளில் மத்திய பட்ஜெட்டில் ரூ.50 ஆயிரம் கோடி செலவிடப்படும். இதை விட மாநிலங்களின் பங்களிப்பு அதிகமாக இருக்கும்.
பாசன வசதி
மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் இதை பயன்படுத்திக்கொள்ள முடியும்.
நடப்பு நிதி ஆண்டில் ரூ.5 ஆயிரத்து 300 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
(இதில் கூடுதலாக 6 லட்சம் ஹெக்டேர் நிலம் பாசன வசதி பெறும். 5 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பு சொட்டு நீர்ப்பாசன வசதி பெறும்.)
கள அளவில், முதலீடுகளை குவித்து சாதனை படைப்பது, சாகுபடி நிலப்பரப்பை பெருக்குவது, பிற தண்ணீர் சேமிப்பு முறைகளை பயன்படுத்துவது உள்ளிட்டவை இந்த திட்டத்தின் முக்கிய நோக்கங்கள் ஆகும்.
வழிகாட்டும் குழு
இந்த திட்டத்தின் கட்டமைப்பு, மாநில அளவிலான பார்வையை கொண்டது. இதனால் மாநிலங்கள், மாவட்ட அளவிலான நீர்ப்பாசன திட்டங்களை, மாநில அளவிலான நீர்ப்பாசன திட்டங்களை தீட்டலாம்.
இந்த திட்டம், பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சகங்களுக்கு இடையேயான தேசிய வழிகாட்டும் குழுவின்மூலம் கண்காணிக்கப்படும். வளங்கள் ஒதுக்கீடு செய்தல், அமைச்சகங்களுக்கு இடையே ஒருங்கிணைத்தல், செயல்பாடுகளை அளவிடுதல், நிர்வாக பிரச்சினைகளை கவனித்தல் ஆகியவற்றுக்காக தேசிய செயற்குழு ஒன்றும் நிதி ஆயோக்கின் துணைத்தலைவர் தலைமையில் அமைக்கப்படும்.
இணையவழி விவசாய சந்தை
தேசிய ஆன்லைன் விவசாய சந்தை (இணைய வழியிலான சந்தை) ஒன்று உருவாக்கப்படும். இதற்காக 3 ஆண்டுகளுக்கு ரூ.200 கோடியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்த ஆன்லைன் விவசாய சந்தை, நாடு முழுவதும் உள்ள 585 மொத்த விற்பனை சந்தைகளை ஒருங்கிணைக்கும்.
ஒட்டுமொத்த மாநிலத்துக்கு ஒரு உரிமம், ஒரு முனை வரி அமல்படுத்தப்படும். விலை நிர்ணயத்துக்காக மின்னணு வழி ஏலம் நடைபெறும். இதன் விளைவாக ஒரு மாநிலமே சந்தை ஆகும்.
இந்த திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 585 ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தைகள் வரும். மாநிலத்திற்குள் வேளாண் விளைபொருட்கள் பரிமாற்றம் நடைபெறும். இதன் மூலம் விவசாயிகளின் சந்தை அளவு பெருகும்.
முதலாவது ஒருங்கிணைந்த தேசிய திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் கொள்கைக்கு அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Source : Dailythanthi

ஜூலை 7-இல் மஞ்சள் சாகுபடி தொழில்நுட்பம் குறித்த இலவச பயிற்சி

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும் 7 ஆம் தேதி காலை 9 மணிக்கு மஞ்சள் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த ஒருநாள் இலவச பயிற்சி நடைபெற உள்ளது.
இதுகுறித்து திட்ட ஒருங்கிணைப்பாளர் பி.மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இப் பயிற்சியில் மஞ்சளில் உள்ள புதிய மேம்படுத்தப்பட்ட ரகங்கள், அதன் சிறப்பியல்புகள், விதையளவு, விதை நேர்த்தி, நடவு முறை, உர மேலாண்மை, நீர்ப் பாசனம், களை நிர்வாகம், பூச்சி மற்றும் நோய் நிர்வாகம், துல்லிய பண்ணை முறையில் மஞ்சள் சாகுபடி முறைகள் மற்றும் விதைக் கிழங்குகளை சேமிக்கும் முறை பற்றிய விளக்கங்கள் அளிக்கப்பட உள்ளன.
இதில் விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்துக்கு நேரில் வந்தோ அல்லது 04286 266345, 266244 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்புகொண்டு 6ஆம் தேதிக்குள் பெயர் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
Source : Dhinamani

இந்திய மாணவர்களுக்கான வெளிநாட்டு உதவித் தொகை


Please visit the following link


http://agritech.tnau.ac.in/ta/hrd/foreign_fellowship_scholarship_ta.html

List of Foreign Fellowships / Scholarships for Indian Students


Please visit the following links :

http://agritech.tnau.ac.in/hrd/foreign_fellowship_scholarship.html

உழுவோம் உழைப்போம் உயர்வோம்'- சிறப்பு தொலைக்காட்சி நிகழ்ச்சி

Wednesday 1 July 2015

மண் பரிசோதனையால் அதிக மகசூல் பெறலாம்


19.jpg
மண் பரிசோதனை செய்து அதன்படி விளைநிலங்களுக்கு உரமிட்டு அதிக மகசூல் பெறலாம்.
 இதுகுறித்து மேற்கு ஆரணி வேளாண்மை உதவி இயக்குநர் ஏ.எம்.சாந்தி கூறியதாவது:
 மண் பரிசோதனை செய்வதன் மூலம் விவசாயிகள் தங்களுடைய விளைநிலத்தின் மண் வளம், தன்மைகளைப் புரிந்துகொள்ள முடியும். எந்த வகையான தானியங்களைப் பயிர் செய்ய முடியும். என்ன வகையான உரமும், ஊட்டச் சத்தும் மண்ணுக்குத் தேவைப்படுகிறது போன்ற நுணுக்கங்களைத் தெரிந்துகொள்ள முடியும்.
 மண் அரிப்பு, மண் வளம் குன்றுதல் போன்றவற்றை அறிய மண் பரிசோதனை மிக அவசியம். 
 பயிர் அறுவடைக்குப் பிறகும் கூட நாம் மண் பரிசோதனை செய்வதன் மூலம் தற்போதைய மண்ணின் வளத்தை அறிய முடியும். பொருளாதார அடிப்படையில் மண் பரிசோதனை செய்வதன் மூலம் தேவைக்கு அதிகமான உரமிடுதலைத் தடுக்க முடியும். அதிகம் வருவாய் தரக்கூடிய பயிர்களைத் தெரிவு செய்து விவசாயம் செய்ய முடியும்.
 அனைத்து மாவட்டங்களிலும் மண் பரிசோதனை செய்துகொள்ள தமிழக வேளாண்மை மேம்பாட்டுக் கழகம் வசதிகளை ஏற்படுத்தியுள்ளது. கிராம அலுவலர்களிடம் தேவையான விவரங்களை அறிந்து கொள்ளலாம். 
 மண் வள அட்டை: மண் மாதிரி எடுத்து ஆய்வு செய்து, மண்வள அட்டை பெற்று, அதிகாரிகள் ஆலோசனைபடி உரமிட்டால் அதிக மகசூல் பெறலாம்.
 விவசாயிகளின் நலன் மண்ணின் வளத்தைப் பொருத்தே அமைகிறது. பயிர் சாகுபடி செய்வதால் ஏற்படும் சத்துக் குறைபாடுகளைச் சரியான உர நிர்வாகத்தின் மூலம் சரிசெய்ய வேண்டியது அவசியம்.
 சரியான உர நிர்வாகத்துக்கு முதலில் மண் பரிசோதனையே அடிப்படையாகும்.
 சத்துகளின் அளவு வேறுபடுவதாலும், சத்துகளின் தேவை மாறுபடுவதாலும் மண் பரிசோதனையின் மூலமே பயிருக்கு ஏற்ப சரியான உர சிபாரிசு வழங்க முடியும்.
 அதன்மூலம் தேவையான அளவு மட்டுமே உரமிடுவதால் குறைந்த செலவில் கூடுதல் மகசூல் பெறுவதோடு அதிகப்படியான உரச்செலவையும் குறைக்கலாம். மண்ணின் தன்மைகளை அறியவும், களர், உவர், அமில நிலங்களை சீர்திருத்தவும் பயிருக்குக் கிடைக்க வேண்டிய சத்துகளின் அளவை அறிந்து அதற்கேற்ப உரமிடவும் மண் பரிசோதனை மிகவும் அவசியமாகிறது. ஆண்டுக்கு ஒரு முறை மண் மாதிரிகள் எடுத்து ஆய்வு செய்ய வேண்டும். நெல், சோளம், பயறுவகைகள், எண்ணெய் வித்துகள் போன்ற பயிர்கள் சாகுபடி செய்ய அந்த நிலத்தில் 15 செ.மீ. ஆழத்திலும், கரும்பு, வாழை, போன்ற பயிர்கள் சாகுபடி செய்ய 30 செ.மீ. ஆழத்திலும், பழந்தோட்டப் பயிர்களாக இருந்தால் 3 அடி ஆழத்திலும் மேல் மண்ணை தவிர்த்து விடமால் "வி' வடிவில் வெட்டி சரிவு மண்ணை அப்புறப்படுத்திய பின் "வி' வடிவில் மேலிருந்து மண்ணைச் சுரண்டி எடுத்தல் வேண்டும். ஒரு வயலில் சுமார் 10 முதல் 12 இடங்களில் எடுத்து நன்கு கலக்கி குவாட்டரிங் முறையில் அரை கிலோ வரும்படி ஒரு துணிப்பையில் எடுத்து கொள்ள வேண்டும். சேகரித்த மண் மாதிரிகளை தனித்தனியாகக் கட்டிச் சுத்தமான துணிப்பைகளிலோ அல்லது பாலித்தீன் பைகளிலோ போட்டு உரிய அடையாளமிட்டு, விவசாயியின் பெயர், முகவரி, நிலத்தின் பெயர், சர்வே எண், அடையாளம், வட்டாரத்தின் பெயர், உர சிபாரிசு கோரப்படும் பயிர், பாசன நீரின் தன்மை, முன் சாகுபடி செய்த பயிர் போன்ற விபரங்களுடன் மண் பரிசோதனை நிலையத்துக்கு அனுப்ப வேண்டும்.
 விவசாயிகள் சரியான தருணத்தில் மண் சோதனை செய்து மண்வள அட்டை பெற்று கொள்ள வேண்டும். அந்த அட்டையில் பரிந்துரைத்துள்ளபடி உரமிட்டு அதிக மகசூல் பெறலாம் என்றார் சாந்தி. 
 
மண்-பரிசோதனையால்-அதிக-மகசூல/article2897205.ece

மாற்றுப் பயிர் சாகுபடியில் வருமானத்தை அள்ளித் தரும் கனகாம்பரம்


18.jpg
மாற்றுப் பயிர் சாகுபடியில் விவசாயிகளுக்கு அதிக வருமானம் தரும் பயிர்களில் ஒன்றாக கனகாம்பரம் திகழ்கிறது. 
 புதுச்சேரி அரசு வேளாண் துறையின் கீழ் காலாப்பட்டு பண்ணை தகவல் மற்றும் ஆலோசனை மையத்துக்கு உள்பட்ட கனகசெட்டிகுளத்தைச் சேர்ந்த விவசாயி தனசேகரன், கனகாம்பரத்தை மாற்றுப் பயிராக சாகுபடி செய்தார். 
 இதில் குறைந்த நீர் மற்றும் நிலப்பரப்பில் அதிக வருமானத்தைப் பெற்றுள்ளார். மேலும், சந்தைப்படுத்துதலும் எளிதாக இருந்தாகவும் தனசேகரன் தெரிவித்துள்ளார். எனவே, விவசாயிகள் கீழே தெரிவிக்கப்பட்டுள்ள தொழில் நுட்பங்களை கடைபிடிப்பதன் மூலம் அதிக லாபம் பெறலாம் என வேளாண் அலுவலர் அனுப்குமார் தெரிவித்துள்ளார். 
 ரகங்கள்: சிவப்பு, ஆரஞ்சு, தில்லி கனகாம்பரம்.
 மண் மற்றும் தட்பவெப்பநிலை: 
 நல்ல வடிகால் வசதியுள்ள மணல் கலந்த வண்டல் மண் மற்றும் செம்மண் ஏற்றது. மண்ணின் அமில காரத் தன்மை 6 முதல் 7.5க்குள் இருக்க வேண்டும். கனகாம்பரம் செடிகள் ஓரளவு நிழலைத் தாங்கி வளரும்.
 பருவம்: ஆண்டு முழுவதும் பயிர் செய்யலாம். மழைக் காலத்தில் நடக்கூடாது.
 நிலம் தயாரித்தல்: நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை நன்கு உழுது பண்படுத்தவேண்டும். கடைசி உழவின் போது எக்டேருக்கு 25 டன் மக்கிய தொழு எரு இட்டு, மண்ணுடன் நன்கு கலந்துவிட வேண்டும். பின்னர் தேவைக் கேற்ப பார்கள் அமைக்க வேண்டும்.
விதையும் விதைப்பும்
இனப்பெருக்கம்: டெல்லி கனகாம்பரம் ரகத்தை வேர் வந்த குச்சிகள் மூலம் இனப்பெருக்கம் செய்யலாம்.
 விதையளவு: 5 கிலோ/எக்டர் இடைவெளி: விதைக்காக பயிரிடுவதாக இருந்தால் 60 - 60 செ.மீ இடைவெளியைப் பின்பற்றவும். டெல்லி கனகாம்பரம் ரகத்துக்கு 60 - 40 செ.மீ. இடைவெளி.
 நாற்றாங்கால் தயாரித்தல்: தேவையான அளவுகளில் மேடைப்பாத்திகள் அமைத்து அவற்றில் ஒரு செ.மீ. ஆழத்தில் விதைகளை விதைத்து, பின்னர் அவற்றை மணல் கொண்டு மூடிவிட வேண்டும். 
 விதைகள் முளைக்கும் வரை தினமும் நீர்ப்பாய்ச்ச வேண்டும். விதைகள் விதைத்த 60-ம் நாளில் நடவுக்குத் தயாராகிவிடும்.
 நடவு செய்தல்: 60 நாள்கள் ஆன நாற்றுக்களைப் பறித்து, 60 செ.மீ. இடைவெளியில் அமைக்கப்பட்டுள்ள பார்களில் நடவு செய்ய வேண்டும். நடும் முன் நாற்றுக்களை எமிசான் (1 கிராம் - லிட்டர்) கரைசலில் நனைத்து நடவேண்டும். நடவு செய்ய ஜூலை, செப்டம்பர் மற்றும் அக்டோபர் வரையிலான பருவங்கள் ஏற்றதாகும். 
 நீர் நிர்வாகம்: 
 ஏழு நாள்களுக்கு ஒருமுறை நீர்பாய்ச்ச வேண்டும்.
 நிலத்தில் நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நிலத்தில் ஈரத்தன்மை அதிகமாக இருந்தால் வேர் அழுகல் நோய் தோன்றக்கூடும். எனவே சீராக நீர்பாய்ச்ச வேண்டும்.
ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை
 அடியுரமாக எக்டேருக்கு 25 டன் தொழு உரம் கடைசி உழவின் போது இடவேண்டும். செடிகள் நட்ட மூன்று மாதங்கள் கழித்து எக்டருக்கு 75 கிலோ தழைச்சத்து, 50 கிலோ மணிச்சத்து, 125 கிலோ சாம்பல் சத்து கொடுக்கக் கூடிய ரசாயன உரங்களை இட வேண்டும். மேற்கண்ட உர அளவை மீண்டும் ஒவ்வொரு ஆறு மாத இடைவெளியில் கொடுக்க வேண்டும். 
 இவ்வாறு இரண்டு ஆண்டுகள் வரை தொடர்ந்து இடவேண்டும். 
 உயிர் உரமாகிய அசோஸ்பைரில்லத்தை ஒரு எக்டேருக்கு 2 கிலோ என்ற அளவில் பயன்படுத்தலாம். செடிகள் நட்ட மூன்று மாதங்கள் கழித்து அஸ்கார்பிக் அமிலம் 1,000 பிபிஎம் என்ற அளவில் தெளித்தால் மகசூல் அதிகரிக்கும். 
 தில்லி கனகாம்பரத்துக்கு: செடிகள் நட்ட 30 நாள்கள் கழித்து எக்டேருக்கு வேப்பம் புண்ணாக்கு 250 கிலோ, தழைச்சத்து 40 கிலோ கொடுக்கக்கூடிய உரங்களை இடவேண்டும். பிறகு 90 நாள்கள் கழித்து 40:20:20 கிலோ என்ற விகிதத்தில் தழை, மணி, சாம்பல் சத்து கொடுக்கக்கூடிய ராசயன உரங்களை 3 மாதங்களுக்கு ஒரு முறை கொடுக்க வேண்டும். 
ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு
 நூற்புழு: நூற்புழுக்கள் மண்ணில் இருந்தால் செடிகளின் வளர்ச்சி குன்றி இலைகள் வெளிறி மகசூல் பாதிக்கப்படும். நூற்புழு தாக்குதலைத் தடுக்க, நூற்புழு தாக்குதல் இல்லாத மண்ணில் கனகாம்பரம் சாகுபடி செய்ய வேண்டும். நிலத்தில் ஈரம் இருக்கும்போது செடிகளின் வேர் பகுதியில் போரேட் அல்லது கார்போப்யூரான் குறுணை மருந்தினை இடவேண்டும்.
 அசிவினிப் பூச்சிகள்: இவை இலைகளில் அடை அடையாக ஒட்டிக் கொண்டு சாற்றினை உறிஞ்சி சேதம் விளைவிக்கும். இவற்றைக் கட்டுப்படுத்த டைமித்தோயேட் மருந்தினை ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மில்லி வீதம் கலந்து தெளிக்கவேண்டும்.
நோய்கள் 
 வாடல் நோய்: இந்நோயின் தாக்குதலினால் செடிகள் நுனிப் பகுதியிலிருந்து வாடி படிப்படியாக செடி முழுவதும் காய்ந்துவிடும். நோயின் அறிகுறிகள் தென்பட்டவுடன் எமிசான் மருந்தினை லிட்டர் நீருக்கு ஒரு கிராம் வீதம் கரைத்து செடிகளைச் சுற்றி வேர் பாகத்தில் ஊற்றிவிட வேண்டும்.
 அறுவடை: நாற்றாங்காலில் இருந்து செடிகள் நட்ட ஒரு மாதம் கழித்து பூக்க ஆரம்பித்து விடும். நன்கு மலர்ந்த மலர்களை இரண்டு நாள்களுக்கு ஒரு முறை பறிக்க வேண்டும்.
 மகசூல்: ஒரு எக்டேருக்கு ஒரு ஆண்டில் 2,000 கிலோ மலர்கள் கிடைக்கும். டெல்லி கனகாம்பரம் ரகம் ஒரு எக்டேருக்கு ஒரு ஆண்டில் 2,800 கிலோ மலர்கள் கொடுக்கும்.
மாற்றுப்-பயிர்-சாகுபடியில்-/article2897226.ece

வேளாண். பல்கலையில் பட்டம் பெற்ற 155 விவசாயிகள்


கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் நேற்று நடைபெற்ற 45-வது நிறுவன நாள் மற்றும் தொலைதூர கல்வி பட்டத் தகுதி பெறும் விழாவில் 155 விவசாயி கள் பட்டம் பெற்றனர்.
உலகிலேயே முதல் முறையாக விவசாயிகளும் படித்து பட்டம் பெறும் வகையில் வேளாண்மைப் பல்கலைக் கழகம் அறிமுகப்படுத்தியுள்ள இளநிலை பண்ணைத் தொழில் நுட்பப் பட்டப் படிப்பில் (பி.எப்.டெக்) விவசாயிகள் பட்டம் பெற்றுள்ளனர்.
விழாவுக்கு ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் தலைமை வகித்தார். பல்கலைக்கழக பதிவாளர் கு.ரா.ஆனந்தகுமார் வரவேற்றார். மேயர் பா.ராஜ்கு மார் வாழ்த்துரை வழங்கினார். தொலைத்தூரக் கல்வி மைய இயக்குநர் பி.சாந்தி கூறும்போது, ‘உலகிலேயே முதல் முறையாக வேளாண் பல்கலை யில் அறிமுகமாகியுள்ள இந்த பட்டப்படிப்பில், 1250 பேர் கல்வி பயின்று வருகின்றனர். 155 பேர் பட்டதாரிகளாக தகுதிச் சான்றிதழ் பெற்றுள் ளனர். விவசாயிகளை தொழில் முனைவோர்களாகவும், பட்டம் பெற்றவர்களாகவும் முன்னேற்ற மடையச் செய்வதே இதன் நோக்கம். 6 பருவங்கள், 120 நேர்முகப் பயிற்சிகள் என 3 ஆண்டு பாடத்திட்டமாக இது உள்ளது. எளியமுறையில் கற்றுக் கொடுக்கப்படுகிறது’ என்றார்.
வேளாண்-பல்கலையில்-பட்டம்-பெற்ற-155-விவசாயிகள்/article7377594.ece

நாட்டுக் கோழி வளர்ப்புக்கு மானியம்


பெரியகுளம், உத்தமபாளையம் வட்டாரங்களில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் நாட்டுக் கறிக்கோழி வளர்ப்புக்கு மானியம் வழங்கப்பட உள்ளது.
     இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
  பெரியகுளம், உத்தமபாளையம் ஆகிய வட்டாரங்களுக்கு உள்பட்ட 8 ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில், நாட்டுக் கறிக் கோழி வளர்ப்பில் ஈடுபடும் 160 பேருக்கு கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் நபார்டு வங்கி மூலம் மானியம் மற்றும் ஊக்கத் தொகை வழங்கப்பட உள்ளது.
  நாட்டுக் கறிக் கோழி வளர்ப்பில் ஈடுபடுபவர்களுக்கு வங்கிக் கடன் மற்றும் பயிற்சி அளிக்கப்படும்.
   இது குறித்த விவரங்களை சம்மந்தப்பட்ட பகுதிகளில் உள்ள கால்நடை மருந்தகங்களில் கால்நடை உதவி மருத்துவர்களை தொடர்பு கொண்டு தெரிந்து கொண்டு, மானிய உதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


http://www.dinamani.com/edition_madurai/theni/2015/07/01/நாட்டுக்-கோழி-வளர்ப்புக்கு-/article2895433.ece