கொள்ளிடம், : நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள சந்தப்படுகையில் தோட்டக்கலை பயிர் சாகுபடியாளர்களுக்கு உழவர் வயல்வெளிப்பள்ளி துவக்க விழா நடந்தது.ஆணைக்காரன்சத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் ஏஷான்பீவி தலைமை வகித்தார். கொள்ளிடம் உதவி தோட்டக்கலை அலுவலர் செல்வராஜ் வரவேற்றார். உழவர் வயல்வெளிப்பள்ளியின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்து தோட்டக்கலை உதவி இயக்குனர் கணேசன் விளக்கினார்.
6 வாரங்கள் நடைபெறும் இப்பயிற்சி வியாழக்கிழமை தோறும் நடைபெறும். முதல் நாளில் குழித்தட்டு முறையில் காய்கறி பயிர் நாற்றங்கால் அமைப்பது பற்றி செயல்விளக்கம் செய்து, அதன் பயன்கள் பற்றி நாகை தோட்டக்கலை அலுவலர் கண்ணன் விளக்கமாக எடுத்துரைத்தார். வரும் பயிற்சி நாட்களில் ஒருங்கிணைந்த பயிர்பாதுகாப்பு, பசுமை குடில் அமைத்து காய்கறி சாகுபடி செய்தல் குறித்து விபரங்கள் தெரிவிக்கப்படும். உதவி தோட்டக்கலை அலுவலர் ஜான்கென்னடி நன்றி கூறினார்.
உழவர் பயிற்சி பள்ளிக்கான ஏற்பாடுகளை உதவிதோட்டகலை அலுவலர்கள் கல்யாணம், குமரேசன், முன்னோடி விவசாயி பன்னீர்செல்வம் ஆகியோர் செய்திருந்தனர். பயிற்சியில் காய்கறி சாகுபடி செய்யும் 25 விவசாயிகள் கலந்து கொண்டனர்.
Source : Dhinakaran
6 வாரங்கள் நடைபெறும் இப்பயிற்சி வியாழக்கிழமை தோறும் நடைபெறும். முதல் நாளில் குழித்தட்டு முறையில் காய்கறி பயிர் நாற்றங்கால் அமைப்பது பற்றி செயல்விளக்கம் செய்து, அதன் பயன்கள் பற்றி நாகை தோட்டக்கலை அலுவலர் கண்ணன் விளக்கமாக எடுத்துரைத்தார். வரும் பயிற்சி நாட்களில் ஒருங்கிணைந்த பயிர்பாதுகாப்பு, பசுமை குடில் அமைத்து காய்கறி சாகுபடி செய்தல் குறித்து விபரங்கள் தெரிவிக்கப்படும். உதவி தோட்டக்கலை அலுவலர் ஜான்கென்னடி நன்றி கூறினார்.
உழவர் பயிற்சி பள்ளிக்கான ஏற்பாடுகளை உதவிதோட்டகலை அலுவலர்கள் கல்யாணம், குமரேசன், முன்னோடி விவசாயி பன்னீர்செல்வம் ஆகியோர் செய்திருந்தனர். பயிற்சியில் காய்கறி சாகுபடி செய்யும் 25 விவசாயிகள் கலந்து கொண்டனர்.
Source : Dhinakaran