Tuesday 2 June 2015

ஜூன் 16, 17-ஆம் தேதிகளில் சிறு தானிய உற்பத்தி பயிற்சி

காட்டாங்கொளத்தூர் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வருகிற 16, 17-ஆம் தேதிகளில் விவசாயிகளுக்கான சிறு தானிய உற்பத்தி பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து வேளாண் உழவர் பயிற்சி நிலைய துணை இயக்குநர் பத்மாவதி கூறியதாவது:
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு, சிறு தானியங்கள் உற்பத்தி செய்வது குறித்த தொழில்நுட்பப் பயிற்சி, பொத்தேரி காட்டுப்பாக்கம் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வருகிற 16, 17-ஆம் தேதிகளில் அளிக்கப்பட்ட உள்ளது.
இந்தப் பயிற்சியில் கலந்து கொள்ள விரும்பும் விவசாயிகள் வருகிற 10-ஆம் தேதிக்குள் மாவட்ட வேளாண் உழவர் பயிற்சி நிலைய அதிகாரிகளிடம் நேரிலோ அல்லது 99529 16247 என்ற செல்லிடப்பேசியிலோ தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம் என்றார் அவர்.
Source : Dhinamani

No comments:

Post a Comment