பதிவு செய்த நாள்
20டிச2014
02:50
ஈரோடு:தமிழகம் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திராவில் இருந்தும், அரிசி வரத்து அதிகரித்துள்ளதால், அரிசி விலை சரிந்துள்ள நிலையில், விற்பனையும், 30 முதல் 40, சதவீதம் வரை சரிந்துள்ளதாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.
"டிசம்பர் சோனா' எனப்படும் கர்நாடகா பொன்னி, தமிழகத்தில் விளைவிக்கப்படும் வெள்ளை பொன்னி, ஐ.ஆர்., 20, பி.பி.டி., ஏ.டி.பி., 35,1009 இட்லி அரிசி என, அனைத்து ரகங்களும், பழைய அரிசி கிலோவுக்கு, இரண்டு ரூபாய், புது அரிசி ஒரு ரூபாய் வரையும் சரிவடைந்துள்ளது. தடையில்லா வர்த்ததகத்தின் மூலம் ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து அதிகளவில், அரிசி மூட்டைகள் வரத்தாகின்றன.இதுகுறித்து, மொத்த அரிசி வியாபாரிகள் கூறியதாவது:
ஆந்திராவின் ரெட்கில்ஸ், நெல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, சென்னைக்கு அதிகளவில் அரிசி மூட்டைகள், லாரிகளில் கொண்டு வரப்படுகின்றன.
Source: http://www.dinamalar.com/news_detail.asp?id=1142443
No comments:
Post a Comment