Thursday 25 December 2014

மணிமுத்தாறு அணை: இன்று தண்ணீர் திறப்பு

திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு அணையில் இருந்து பாசனத்துக்காக வெள்ளிக்கிழமை (டிச.26) முதல் தண்ணீர் திறக்க முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உத்தரவிட்டார்.
இது குறித்து வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு:
திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு அணையில் இருந்து பிசானப் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடுமாறு விவசாயிகளிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.
அதை ஏற்று மணிமுத்தாறு பிரதான கால்வாயின் 3, 4-ஆவது பிரிவு பாசன நிலங்களுக்கு வெள்ளிக்கிழமை (டிச.26) முதல் தண்ணீர் திறந்துவிட உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம், நான்குநேரி, திருநெல்வேலி, பாளையங்கோட்டை, ராதாபுரம், தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் ஆகிய வட்டங்களில் உள்ள 12,018 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் என முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Source: மணிமுத்தாறு-அணை-இன்று-தண்ணீ/article2588654.ece

No comments:

Post a Comment