பதிவு செய்த நாள்
24டிச2014
02:15
ஊட்டி : ஊட்டியில், நாளை துவங்கவுள்ள தேயிலை சுற்றுலா வார விழாவுக்கு, தேயிலை தொழில் சார்ந்த அமைப்புகளின் ஆதரவு, எதிர்பார்த்த அளவு இல்லாததால், விழா களை கட்டுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஆண்டுதோறும் டிசம்பர் மாதம், அரையாண்டு தேர்வு விடுமுறையில், நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளை கருத்தில் கொண்டு, ஊட்டியில், தேயிலை சுற்றுலா வார விழா கொண்டாட்டங்கள் நடத்தப்படுவது வழக்கம். இதில், நீலகிரியின் பொருளாதார முதுகெலும்பாக விளங்கும் தேயிலை தொழில், அது சார்ந்த சுற்றுலா வளர்ச்சி தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். இதில், நீலகிரி தேயிலையின் முக்கியத்துவம், அவற்றால் கிடைக்கும் மருத்துவ குணங்கள் குறித்து விளக்கப்படும். தவிர, சுற்றுலா துறை மற்றும் கலைப்பண்பாட்டு துறை சார்பில், நாட்டுப்புற நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இந்தாண்டுக்கான விழா, வரும், 26ம் தேதி முதல் 28ம் தேதி வரை, ஊட்டி எச்.ஏ.டி.பி., திறந்தவெளி விளையாட்டு மைதானத்தில் நடத்தப்பட உள்ளது; பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Source: http://www.dinamalar.com/news_detail.asp?id=1145321
No comments:
Post a Comment