Thursday 28 May 2015

அதிக விலைக்கு உரம் விற்றால் உரிமம் ரத்து

திருவள்ளூர் மாவட்டத்தில் அதிக விலைக்கு உரம் விற்றால் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் எச்சரித்தார்.
திருவள்ளூர் மாவட்ட உர விற்பனையாளர்களுக்கான புத்தாக்கப் பயிற்சிக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் தலைமை வகித்துப் பேசியபோது, அரசு நிர்ணயித்துள்ள விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு உரங்களை விற்கக் கூடாது. அதிக விலைக்கு விற்பதாக புகார்கள் வந்தால் அந்த நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றார்.
உதவி இயக்குநர் எல்.சுரேஷ், துணை இயக்குநர்கள் ஸ்டான்லி, எபிநேசன் ஆகியோர் பயிற்சி அளித்தனர். இதில், தொடக்க வேளாண்மை கடன் சங்கச் செயலர்கள், உர விற்பனையாளர்கள் பங்கேற்றனர். சண்முகம் நன்றி கூறினார்.

Source : Dhinamani

No comments:

Post a Comment